மேலும்

பிரிவு: செய்திகள்

வெள்ளைக்கொடி, பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலைகள் – விசாரணை அறிக்கை பெப்ரவரியில்

வெள்ளைக் கொடி விவகாரம், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலச்சந்திரன் படுகொலை, இசைப்பிரியா படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

மூன்று முக்கிய விவகாரங்கள் – கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்

நீண்டகாலத்திற்கு பின்னர்  நேற்றுக் கூட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ஐ.நா தீர்மானம், அரசியல் கைதிகளின் விடயம், கூட்டாக செயற்படுதல் ஆகிய மூன்று விவகாரங்கள் குறித்து, நீண்ட நேரம் காரசாரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்போம் – இரா. சம்பந்தன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பையும், அழுத்தங்களையும் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சியே அதிபர் மாளிகையில் பதுங்குகுழி அமைத்தோம் – மகிந்த ராஜபக்ச

அதிபர் மாளிகையில், தாம் நிலத்தடி சொகுசு மாளிகையை அமைக்கவில்லை என்றும், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி என்றும், அதுபோன்ற பதுங்கு குழி அலரி மாளிகையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

யோசித ராஜபக்ச குறித்த விசாரணை அறிக்கையை மூடிமறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். யோசித ராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை – சிறிலங்கா அரசாங்கம் கைவிரிப்பு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தேஜஸ் போர் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்க இந்தியா விருப்பம்

சிறிலங்கா விமானப்படைக்கு, உள்நாட்டில் தயாரித்த தேஜஸ் ரக சுப்பர் சொனிக் ஜெட் போர் விமானங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருக்கிறாரா சிறிசேன?

சிறிலங்கா இராணுவத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடக்கம் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வரையான அனைத்து விவகாரங்களையும் சிறிலங்கா அரசாங்கம் கையாளும் போது மட்டுமே மக்கள் சந்தித்துள்ள போர் வடுக்களைக் குணப்படுத்த முடியும்.

திகம்பத்தானை குண்டுத் தாக்குதல் – கடற்படை மீது குற்றம்சாட்டுகிறது உடலகம ஆணைக்குழு

திகம்பத்தானையில், சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணி தரித்து நிற்கும் இடைத்தங்கல் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் கடமை தவறியதே காரணம் என்று உடலகம ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

பாலியல் இலஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டப்பட்ட அதிகாரி மன்னாருக்கு மாற்றம்

முழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்குப் பாலியல் இலஞ்சம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, சிறிலங்கா காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.