மேலும்

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமனம்

mahinda deshapriyaசிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்படும்  சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக, தற்போதைய தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைவாக, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட 10 சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான மூன்று உறுப்பினர்களின் பெயர்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரியவும், உறுப்பினர்களாக யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் மற்றும் என்.ஜே அபேசேகர ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *