மேலும்

மாதம்: May 2026

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 255 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி  மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8-ஆம் நாளான நேற்று, குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா- சிறிலங்கா தரைவழிப்பாதை- அவசியம் மட்டுமல்ல, அவசரமானது

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே  தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது என்றும், அதற்குத்  தயங்குவதற்கான காலம் முடிந்து விட்டது என்றும்,  இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் இரட்டைக் குடியுரிமையை கொண்டிருக்கவில்லை

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தனது பொதுப் பதவிக் காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

நீதித்துறை சுதந்திரத்தை பேணுமாறு சிறிலங்கா அதிபரிடம் எதிர்க்கட்சி எம்.பிகள் கோரிக்கை

நீதித்துறையை மதித்து அதன் சுதந்திரத்தைப் பேணுமாறு  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  ஒரு மனுவை அனுப்பவுள்ளனர்.

செம்மணி புதைகுழியில் கைக்குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 7 வது நாளான நேற்று கைக்குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி ஐ.என்.எஸ். சிந்துகேசரி

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துகேசரி,கொழும்பு துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் அமைகிறது தொங்கு சட்டமன்றம் – விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், 106 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

கூடுதல் சந்தை வாய்ப்பு தராவிட்டால் முதலீடு இல்லை- சினோபெக் திட்டவட்டம்

உள்ளூரில் கூடுதல் சந்தை வாய்ப்பு  அளிக்கப்படாவிட்டால்,  3.7 பில்லியன் டொலர் மதிப்பிலான அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை சினோபெக் நிறுவனம் முன்னெடுக்காது என்று சீனா அறிவித்துள்ளது.

எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு- சிறப்பு நிரந்தர நீதிமன்றம் நியமனம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக, சிறிலங்கா பிரதம நீதியரசர், சிறப்பு நிரந்தர ட்ரயல்  அட் பார்  அமர்வை நியமித்துள்ளார்.

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை மீண்டும் சந்தேக நபராக பெயரிட உத்தரவு

கொழும்பு மற்றும் அயல் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை இரண்டாவது சந்தேக நபராக மீண்டும் பெயரிடுமாறு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமர உத்தரவிட்டுள்ளார்.