மேலும்

மாதம்: May 2026

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி உடன்பாடு- இந்த மாதம் இறுதியாகும்

காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் அதனை இந்தியாவினால் நியமிக்கப்பட்ட  அமைப்பு மூலம் நிர்வகிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவைத் தயாரிக்கும் பணி இந்த மாதம் நிறைவடையும் என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

திறைசேரி நிதி மோசடி- அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவின் உதவியும் கோரப்பட்டது

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்டது குறித்த  விசாரணையை விரிவுபடுத்தும் வகையில், சிறிலங்கா புலனாய்வாளர்கள் அமெரிக்காவின் எவ்பிஐ எனப்படும் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் உதவியை நாடியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திறைசேரி செயலாளரை பதவி நீக்கும் திட்டம் இல்லையாம்

திறைசேரி செயலாளர்  ஹர்ஷன சூரியப்பெருமவை பதவியிலிருந்து நீக்குவது குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என, தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 246 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின்,  மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்,  ஆறாம் நாளான இன்று மேலும் இரண்டு மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே தெரியும் எனத் தாம் நம்புவதாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

செம்மணியில் மற்றொரு மனித எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பொது நிதிக்குழுவில் தகவல்களை வெளியிட மறுத்த திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருட்டு  குறித்த தகவல்களை, நாடாளுமன்ற பொது நிதிக் குழுவிடம் வெளியிட திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்த வெள்ளத்தில் கிடந்த திறைசேரி அதிகாரி ராஜபக்ச – மரணத்தில் சந்தேகம்.

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திறைசேரி நிதி திருட்டு தொடர்பாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட வெளி வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்கா நிஷாந்த ராஜபக்ச மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சினோபெக்கின் 3.7 பில்லியன் டொலர் முதலீடு குறித்து 2 மாதங்களில் முடிவு

அம்பாந்தோட்டையில் முன்மொழியப்பட்டுள்ள சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் குறித்து முடிவெடுக்க அரசாங்கத்திற்கு குறைந்தது இன்னும் ஓரிரு மாதங்கள் தேவை என்று, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.