மேலும்

நாள்: 5th May 2026

இந்தியா- சிறிலங்கா தரைவழிப்பாதை- அவசியம் மட்டுமல்ல, அவசரமானது

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே  தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது என்றும், அதற்குத்  தயங்குவதற்கான காலம் முடிந்து விட்டது என்றும்,  இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் இரட்டைக் குடியுரிமையை கொண்டிருக்கவில்லை

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தனது பொதுப் பதவிக் காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருக்கவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

நீதித்துறை சுதந்திரத்தை பேணுமாறு சிறிலங்கா அதிபரிடம் எதிர்க்கட்சி எம்.பிகள் கோரிக்கை

நீதித்துறையை மதித்து அதன் சுதந்திரத்தைப் பேணுமாறு  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  ஒரு மனுவை அனுப்பவுள்ளனர்.

செம்மணி புதைகுழியில் கைக்குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 7 வது நாளான நேற்று கைக்குழந்தை உள்ளிட்ட 4 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.