மேலும்

நாள்: 27th May 2026

பறிபோனது 2.5 மில்லியன் டொலர்- கண்டுபிடித்தது 200 டொலர்

சிறிலங்கா நிதி அமைச்சின் கணினி அமைப்பில் ஊடுருவிய இணைய மோசடியாளர்களால்,  திறைசேரியில் இருந்து திருடப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 200 டொலர்கள் மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஹெய்டிக்கு 900 சிறிலங்கா படையினரை அனுப்புவதற்கே ஐ.நா அனுமதி

ஹெய்டியில் நிறுத்தப்படும் ஐ.நாவின் கும்பல் அடக்கும் படைப்பிரிவில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 900 பேரை இணைத்துக் கொள்வதற்கு ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தாவும் எம்.பிக்களின் பதவிகளை பறிக்க விரைவில் சட்டமூலம்

கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.