மேலும்

மாதம்: July 2019

‘’ஐ.எஸ் தாக்கவில்லை, அனைத்துலக சக்தியின் சதி வேலை” – என்கிறார் தயாசிறி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருக்கவில்லை என்றும், இது அனைத்துலக சக்தி ஒன்றின் வேலையே எனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று சிறிலங்கா வருகிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்ஸ் டி கெர்சோவ், சிறிலங்காவுக்கும் மாலைதீவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உடன்பாட்டுக்கு வந்தால் தான் அமெரிக்காவுடன் சோபாவில் கையெழுத்து – ரணில்

சிறிலங்காவின் கருத்துக்களுக்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டால் மட்டுமே, சோபா மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் (அக்சா) உடன்பாடுகளில் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரிகேடியர் உள்ளிட்ட 4 இராணுவத்தினருக்கு எதிராக ட்ரயல் அட் பார் விசாரணை

ரதுபஸ்வெலவில் குடிநீர் கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க, மூன்று நீதியரசர்களைக் கொண்ட ட்ரயல் அட் பார் அமர்வு ஒன்றை நியமிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரிடம், சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

பிரித்தானியா சென்றார் சிறிலங்கா அதிபர் – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன்

மூன்று நாட்கள் தனிப்பட்ட பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். நேற்று மதியம் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையை நிறுவினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை நியமித்துள்ளார். கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தல் வழக்கிலும் சிக்குகிறார் முன்னாள் புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ச

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில், முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி கோப்ரல் லலித் ராஜபக்சவையும் சந்தேக நபராக சேர்த்துக் கொள்ளுமாறு, குற்ற விசாரணை பிரிவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

ரணிலுக்கும் தெரிவுக்குழு அழைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தமக்கும் சாட்சியமளிக்க அழைப்பு விடுத்துள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று விவாதம் – நாளை வாக்கெடுப்பு

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்றும் நாளையும், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

விக்னேஸ்வரன்- கஜேந்திரன் கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தோல்வி

புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கும் நோக்கில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்படவிருந்த பேச்சுக்கள் ரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.