மேலும்

நாள்: 30th July 2019

வலைத்தளத்தில் உலாவ விடப்பட்ட கோத்தாவின் மோசடி ஆவணம்

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு சான்றிதழ் என, சமூக வலைத்தளங்களில் உலாவும், ஆவணம் மோசடி செய்யப்பட்ட போலியான சான்றிதழ் என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு வெலிசறை கடற்படைத் தள, தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, அமெரிக்க அதிகாரிகள் சந்தித்துள்ளனர் என, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

றிசாத் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்களுக்குத் தடை

வரும் அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், எந்தவொரு வேட்பாளரும் போலி வேட்பாளர் எனக் கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், மகிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எச்சரித்துள்ளார்.

4 முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்றனர் – மூவர் நிலை இழுபறி

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சர் பதவிகளை நேற்று மாலை ஏற்றுக் கொண்டனர்.

அமைச்சரவைக் கூட்ட நேரத்தை மாற்றினார் மைத்திரி

அமைச்சரவைக் கூட்டங்களை இனிமேல் காலையில் நேரகாலத்துடன் நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

ஐதேகவில் நான்கு அதிபர் வேட்பாளர்கள்

வரும் அதிபர் தேர்தலில் ஐதேகவின் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்று கருதப்படுவோரின்  எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

வானை கடத்திய மர்ம நபர்கள் – இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு

வான் ஒன்றைக் கடத்திச் சென்றவர்கள் மீது பாணந்துறை -பின்வத்த சந்தியில் நேற்றிரவு சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். மற்றொருவர் தப்பிச் சென்றார்.