மேலும்

நாள்: 25th July 2019

ஐ.நா அறிக்கையாளரை அனுமதித்த பதில் வெளிவிவகார செயலர் பதவி நீக்கம்

தலைமை நீதியரசர் மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகளை,  ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறு நீதியமைச்சின் செயலருக்கு அறிவுறுத்தலை அனுப்பிய- வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

புலனாய்வு உயர் அதிகாரிகள் ஒளிய வேண்டியதில்லை- சிஐடி பணிப்பாளர்

உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக் கூடாது என்றும், இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே அவ்வாறு மறைத்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும், குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு இல்லை – சமல் ராஜபக்ச

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பனை நிதியத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சுயாதீனமான பனை நிதியத்தை உருவாக்குவதற்கு, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு

உலகின் ஏனைய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து, சிறிலங்கா அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு, அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.