மேலும்

நாள்: 28th July 2019

பேராயரின் அரசியல்

இலங்கை அரசியலில் மதத் தலைவர்கள் எப்போதும் செல்வாக்கு மிக்கவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என நான்கு பிரதான மதங்கள் இருந்தாலும், பௌத்த மதத் தலைவர்கள் தவிர்ந்த ஏனைய மதத் தலைவர்கள், பெரும்பாலும் அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பது அல்லது வெளிப்படுத்துவது கிடையாது.

சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம்

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கதிர்காமர் கொலை – ஜேர்மனி வழக்கினால் குழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள்

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதிட ஆலோசனைப்படி கர்நாடக ஆலயங்களில் ரணில் சிறப்பு வழிபாடு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளிலும், யாகங்களை நடத்துவதிலும் ஈடுபட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நிறுவனத்துக்கு 17 பில்லியன் ரூபா ஒப்பந்தம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை நவீனமயப்படுத்தும், பல பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம், சிறிலங்கா அரசாங்கத்தினால் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலர் சுனில் ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலை குழப்பும் பருவமழை

சிறிலங்காவின் அதிபர் தேர்தல் பரப்புரைகள், மோசமான காலநிலையால் பாதிக்கப்படக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆப்கான், ஈராக்கில் பணியாற்றிய அதிகாரியை கொழும்புக்கு அனுப்பியது அமெரிக்கா

ஆப்கானிஸ்தான், ஈராக், கொசோவோ ஆகிய மோதல் பிரதேசங்களில் பணியாற்றிய அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ட்ராவிஸ் கொக்ஸ், சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மகிந்தவை தனியாக சந்திக்கிறார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணியை அமைப்பது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசவுள்ளார்.