மேலும்

மாதம்: June 2019

ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா

ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு வெளியே 5ஆவது இராணுவ தொழில்நுட்ப கருத்தரங்கு – ‘இராணுவம் -2019’ (International Military and Technical Forum – ARMY 2019) என்ற பெயரில்,  நடந்து கொண்டிருந்த போது, கொழும்பில் ஊடக ஆசிரியர்களிடம், ரஷ்ய ஆயுத தளபாடங்களை வாங்குவதற்கு அமெரிக்கா தடை போடுவதாக குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பு வராது – அமெரிக்கா

சிறிலங்கா- அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது என்றும்,  இங்கு அமெரிக்க படைகள் தளங்களை அமைக்கவோ, போர்த் தளபாடங்களை நிறுவவோ அனுமதிக்காது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தூக்கிலிடும் உத்தரவும் இல்லை – தூக்கில் போடுபவரும் தெரிவாகவில்லை

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது தொடர்பான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு இன்னமும் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரம் ஒன்று விரைவில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியா?- மறுக்கிறார் வேடுவர் தலைவர்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட தாம் விரும்பவில்லை என்றும், சிறிலங்காவின் பழங்குடி வேடுவர் சமூகத்தின் தலைவரான, உருவாரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் அழைப்பை நிராகரித்த தயாசிறி  சிக்கலில் மாட்டுவாரா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே சோபாவில் கையெழுத்து – ருவன் விஜேவர்த்தன

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள  சோபா உடன்பாட்டின் நிபந்தனைகள், சிறிலங்காவுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே, அந்த உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

றிசாத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை- பதில் காவல்துறை மா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் அல்லது எந்தவொரு தீவிரவாத செயற்பாடுகளுடனும், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு தொடர்புகள் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிரான ஆதாரமும் இல்லை என சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.

7 நாட்களுக்குள் தூக்கு இல்லை- சிறைச்சாலைகள் ஆணையாளர் உறுதி

அடுத்த 7 நாட்களுக்கு எந்த சிறைக்கைதியும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், உறுதி அளித்துள்ளார்.