மேலும்

நாள்: 3rd July 2019

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4

தெற்காசியப் பிராந்தியத்தில் மிகச்சிறிய இன அடையாளத்தை கொண்ட ஒரு அலகினால், அதீத மதவாத சிந்தனையின் பால் சார்ந்து,  நன்கு திட்டமிட்ட வகையில் தனது சவால்களை எதிர் கொள்வது மட்டுமல்லாது,  இதர இன அடையாளங்களை துல்லியமாக ஜனநாயகத்தின் பெயரால் பெளத்த மேலாண்மைக்குள் உள்ளாக்கக் கூடிய ஒரு தகைமையை சிறிலங்கா அரச திணைக்களங்களும்,  பௌத்த மதபீடங்களும் கொண்டிருக்கின்றன.

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி – நாளை மறுநாள் ஆரம்பம்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுநாள், ஆரம்பிக்கப்படவுள்ளன.

சோபாவின் தாக்கங்கள் குறித்து ஆராய இரண்டு குழுக்கள- மகிந்தவினால் நியமனம்

அமெரிக்காவுடன் செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ள சோபா உடன்பாட்டின் உள்ளடக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, இரண்டு குழுக்களை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.

அதிபர் தேர்தல் முடியும் வரை அமெரிக்க உடன்பாடுகளை தாமதிக்க வேண்டும் – தயாசிறி

2019 அதிபர் தேர்தல் முடிவடையும் வரை, அமெரிக்காவுடனான சோபா உடன்பாடு குறித்த இறுதி முடிவை தாமதிக்க வேண்டும் என்பதே சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு என, அவரது சார்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஹேமசிறியும், பூஜிதவும் மருத்துவமனைகளிலேயே  விளக்கமறியல்

கொழும்பு மருத்துவனைகளில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும், காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவையும், இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதிபரின் உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அதிகாரமில்லை – சட்டமா அதிபர்

சிறிலங்கா அதிபரின் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று சட்டமா அதிபர் நேற்று அடிப்படை எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றிலும் மைத்திரிக்கு ‘ஆப்பு’ வைக்க ஆளும்கட்சி திட்டம்

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கத் தரப்பு முடிவு செய்துள்ளதாக ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘என் உயிருக்கு ஆபத்து’ – மீண்டும் புலம்பத் தொடங்கியுள்ள சிறிலங்கா அதிபர்

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதால் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.