பிரித்தானியா சென்றார் சிறிலங்கா அதிபர் – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன்
மூன்று நாட்கள் தனிப்பட்ட பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பிரித்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். நேற்று மதியம் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டார்.
தனது மகன் தஹம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மூன்று நாட்கள் அவர் பிரித்தானியாவில் தங்கியிருப்பார் என்று தெரியவருகிறது.
முன்னதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவை, பதில் பாதுகாப்பு அமைச்சராக சிறிலங்கா அதிபர் நேற்று நியமித்துள்ளார்.
தாம் நாட்டில் இல்லாத போது, பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுவதற்கு ருவன் விஜேவர்த்தனவுக்கு சிறிலங்கா அதிபர் அதிகாரம் அளித்துள்ளார்.