மேலும்

நாள்: 24th July 2019

21/4 தாக்குதலுடன் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை – சிஐடி பணிப்பாளர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்திய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதிகள், ஐஎஸ்  அமைப்புடன் நேரடியான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என, குற்ற விசாரணைத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளரான ரவி செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் புலிகள் இயக்க உறுப்பினர் மீது பாயும் கதிர்காமர் கொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு உதவினார் என, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனி காவல்துறையினர், வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

கோத்தா இல்லையேல் தினேஸ் – மொட்டு கட்சி திட்டம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்படக் கூடியவர்களில் தினேஸ் குணவர்த்தனவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதித்துறை அதிகாரிகள் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்புக்கு தடை

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் உடன், தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நிறுத்துமாறு சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

நாடு திரும்பினார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்றிரவு 11.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பினார். 

46 நாடுகளின் பயணிகளுக்கு சிறிலங்காவில் இலவச வருகை நுழைவிசைவு

இந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வருகை நுழைவிசைவு வழங்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வரும் ஓகஸ்ட் 1ஆம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

கொழும்புடன் இணைந்தது துறைமுக நகர நிலப்பரப்பு

கடலுக்குள் புதிதாக உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர நிலப்பரப்பை, கொழும்பு பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கான, தீர்மானம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

மகிந்தவுடனான சந்திப்பு – அமெரிக்க தூதுவர் மௌனம்

சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் நேற்று, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.