மேலும்

மாதம்: December 2018

வன்னியைப் புரட்டிப் போட்ட வெள்ளம் – 10 ஆயிரம் பேர் பாதிப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம், கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மன்னார் புதைகுழி எலும்பு மாதிரிகள் புளோரிடாவுக்கு – விமான நிலையங்களுக்கு அறிவிப்பு

மன்னார் – சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் வரும் ஜனவரி மூன்றாவது வாரம், காபன் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது.

நீதியரசர்கள் நியமனத்தில் சிறிலங்கா அதிபர் – அரசியலமைப்பு சபை இடையே இழுபறி

உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களுக்கு, அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளின் பெயர்களை சிறிலங்கா அதிபர் நிராகரித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்ட நிதி உதவிகளை பெற வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு

அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக ஜனவரி மாதம் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி முதல் வாரத்தில்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்

1978ல், நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ‘தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஒருவர் பைத்தியக்காரராக இருந்தால் என்ன நடக்கும்’என லங்காசமசமாஜக்  கட்சியைச் சேர்ந்த என்.எம்.பெரேரா கேள்வியெழுப்பியிருந்தார்.

சிறிலங்கா விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயற்பட்ட அமெரிக்கா- இந்தியா

சிறிலங்கா, மாலைதீவு  ஆகிய நாடுகளில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் போது, அமெரிக்காவும் இந்தியாவும்  மிகநெருக்கமாக ஒருங்கிணைந்து செயற்பட்டதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில்  பிரதி உதவிச் செயலர் டேவிட் ரான்ஸ் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் கையில் செயலகம் – மகிந்தவின் இக்கட்டான நிலை

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான இழுபறிக்கு இன்னமும் முடிவு காணப்படாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இன்னமும், இரா.சம்பந்தனின் பொறுப்பிலேயே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் கொட்டிய பெருமழை – கிளிநொச்சி கிராமங்கள் வெள்ளக்காடு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கொட்டிய கடும் மழையினால், குளங்கள் நிரம்பி, வெள்ளநீர் பெருக்கெடுத்துப் பாய்கிறது. இதனால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் நிறைவேறியது

2019ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான நான்கு மாதங்களுக்கான அரசாங்க செலவுகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும், கணக்கு அறிக்கைக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.