மேலும்

நாள்: 3rd December 2018

இடைக்காலத் தடைக்கு எதிராக நாளை உச்சநீதிமன்றில் முறையீடு செய்கிறார் மகிந்த

சிறிலங்கா பிரதமராகச் செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விதித்துள்ள இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் நாளை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளதாக, மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல் நெருக்கடிக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு – சிறிலங்கா அதிபர்

மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் செயற்பட இடைக்கால தடைவிதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று மாலை சிறிலங்கா அரசியலில் திடீர் திருப்பங்கள் நிகழும் வாய்ப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன  இன்று நாளை நடத்தவுள்ள இரண்டு முக்கிய சந்திப்புகளை தொடர்ந்து,   திடீர் அரசியல் மாற்றங்கள் நிகழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மகிந்தவுக்கும், அமைச்சர்களுக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

சிறிலங்காவின் பிரதமராக மகிந்த ராஜபக்சவும்,  அவரது அமைச்சர்களும், செயற்படுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மகிந்த, அமைச்சரவைக்கு எதிரான மனு – இன்று பிற்பகல் முக்கிய உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச மற்றும், அமைச்சர்கள், இந்தப் பதவிகளை வகிப்பதற்கு  சட்டரீதியான உரிமையற்றவர்கள் என்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யாதுரிமைப் பேராண்மை மனு மீது இன்று பிற்பகல் 3 மணிக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு விளக்கமளிக்கவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு

இந்திய- சிறிலங்கா உறவுகள் குறித்தும், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும், இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகார நிலையியல் குழுவுக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் விளக்கமளிக்கவுள்ளனர்.

ஐதேமுவை வெட்டிவிட்டு பசில் குழுவுடன் இரவிரவாக மைத்திரி ஆலோசனை

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் ரத்துச் செய்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைதியைக் குலைத்தால் மீண்டும் வீதிக்கு வருவோம் – யாழ். படைத் தளபதியின் எச்சரிக்கை

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிட்டால், சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும், வீதிகளில் மீண்டும்  முகாம்களை அமைத்து, சோதனைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார், யாழ்ப்பாண படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி.

பசில், கம்மன்பிலவுடன் ஒன்றாக நின்ற வசந்த சேனநாயக்க – இப்போது எந்தப் பக்கத்தில்?

கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் குழப்பத்துக்குப் பின்னர், ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் இடையில் மாறி மாறி தாவி பரபரப்பை ஏற்படுத்திய வசந்த சேனநாயக்க நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைப்படுத்த தேர்தலே ஒரே வழி – என்கிறார் மகிந்த

சிறிலங்காவில் ஜனநாயகத்தை நிலைப்படுத்துவதற்கு, பொதுத்தேர்தலை நடத்துவதே ஒரே வழி என்று, சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்ட சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.