மேலும்

நாள்: 12th December 2018

ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை – 117 வாக்குகளுடன் நிறைவேறியது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 117 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை

புராதான பட்டுப் பாதையுடன் தொடர்புபட்ட விடயங்களை சிறிலங்காவில் ஆய்வுசெய்யும் பணியை சீனாவிலுள்ள ஷங்காய் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்பொருளியலாளர்கள் அண்மையில் மேற்கொண்டிருந்தனர்.

அமெரிக்க தூதுவர் மீது பாயும் மகிந்த தரப்பு

சிறிலங்காவின் பொருளாதார நிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் மீது மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

‘கல்வி அமைச்சர் அகில விராஜ்’ – ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்த மைத்திரி

கூட்டு அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் படத்துடன் அச்சிடப்பட்டிருந்த, மாணவர்களுக்கான சீருடைத் துணி உறுதிச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

தீர்ந்துபோன 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம்

சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தப் பிரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று முற்பகல் கூடவுள்ளது. இன்றைய அமர்வில், ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க முடிவு

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ரணிலின் பதவியை பறிக்கக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதியிழக்கச் செய்யும், உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், யாதுரிமைப் பேராணை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதித்துறை மீது தலையிடும் மைத்திரி – உச்சநீதிமன்றில் மனு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நீதித்துறையை அவமதித்துள்ளதாகவும், நீதித்துறை சுதந்திரத்தின் மீது தலையீடு செய்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.