மேலும்

நாள்: 13th December 2018

ரணில் ஆட்சியமைக்க சிறிலங்கா அதிபர் ‘பச்சைக்கொடி’?

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும்,  நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற அரசாங்கத்தை உருவாக்கி தொடருவதற்கு அவர் அனுமதிப்பார் என்றும், அதிபர் ஊடகப் பிரிவின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் அவசர கூட்டம் – ரணிலை நியமிக்க மறுப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு – இவர்களின் கருத்து

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசியதழ் அறிவிப்பு, சட்டவிரோதமானது என்று, உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து, இந்த வழக்கில் முன்னிலையான சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு அரசியலமைப்புக்கு, எதிரானது, என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

இன்று மாலை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசிதழுக்கு எதிராக தொடரப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கவுள்ளது.

குழப்பங்களுக்கு மத்தியில் கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நேற்று கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

தீர்ப்பை தொகுக்கும் பணியில் நீதியரசர்கள் – இன்று அல்லது நாளை வெளியாகும்

சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – சித்தார்த்தன்

வடக்கு, கிழக்கிற்கு அதிகாரங்களைப் பகிர்வது, அரசியல் கைதிகள், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலேயே, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

கூட்டமைப்புடன் இரகசிய உடன்பாடு இல்லை – சஜித் பிரேமதாச

ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதி தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐதேமு அரசாங்கத்தில் கூட்டமைப்பு இடம்பெறாது – மாவை சேனாதிராசா

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்றும், தொடர்ந்தும் எதிர்க்கட்சியாகவே செயற்படும் எனவும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.