மேலும்

மாதம்: November 2018

ஐதேமுவுக்கு ஆதரவு அளிப்பது அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தமில்லை – சுமந்திரன்

நாட்டில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு அளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்ததை வைத்து, அவர்களுடன் இணைந்து கொள்வதாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மகிந்தவை பதவி நீக்கக் கோரும் மனு மீது விசாரணை

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இரு காவல்துறையினர் சுட்டுக்கொலை – மட்டக்களப்பு விரைகிறார் பூஜித ஜெயசுந்தர

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச்சாவடியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மட்டக்களப்பு விரைந்துள்ளார்.

அமைச்சர்கள் அரச நிதியைப் பயன்படுத்தத் தடை  – நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேறியது

சிறிலங்காவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்  அரசாங்க நிதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் 122 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்கா வரும் இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள்

இந்திய கடலோரக் காவல்படையின் இரண்டு பாரிய ரோந்துக் கப்பல்கள் ஒரு வார காலப் பயணமாக நாளை, சிறிலங்காவுக்கு  வரவுள்ளன.

ரணில் – மகிந்த நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் இன்று சந்தித்துப் கேச்சு நடத்தியுள்ளனர்.

அட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில் பார்வையிட்டார் மகிந்த

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.

மட்டக்களப்பில் இரு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு- வவுணதீவில்  இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரணில், சம்பந்தன் தரப்புகளை இன்று மாலை தனித்தனியாகச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில், ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நாளை சம்பந்தன், ஐதேமு தலைவர்களை சந்திக்கிறார் மைத்திரி

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பது குறித்து நாளை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்தவுள்ளார்.