மேலும்

நாள்: 17th December 2018

சிறிலங்கா அரசியல் மாற்றம் – அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு

சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும், தீர்த்து வைக்கப்பட்டிருப்பதை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் வரவேற்றுள்ளன.

ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை

டிசம்பர் மாத ஆரம்பத்தில் அனைத்துலக அரங்கில் தென் அமெரிக்க நாடான  ஆஜென்ரீனாவில் இடம் பெற்ற  உலகின் இருபது பெரிய நாடுகளின் G-20 மாநாடு மிக முக்கிய இடம் பெற்றிருந்தது.

சுதந்திரக் கட்சி எம்.பிக்களுக்கு எதிராக முதலமைச்சர்கள் போர்க்கொடி

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக் கூடாது என்றும், ஐதேகவுடன் கூட்டு அரசாங்கத்தை அமைப்பதில் இருந்து அவர்களை விலகி இருக்குமாறும், ஆறு மாகாணங்களின் தற்போதைய மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் கோரியுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்

தியத்தலாவ இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட பணியக மற்றும் அரங்க வளாகம் சிறிலங்கா அதிபர் மற்றும் சீனத் தூதுவரால், சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவை நியமனம் தாமதமாகும்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்த பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதால், புதிய அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆகலாம் என்று, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிஐஏ, எம்16 புலனாய்வு அமைப்புகளுடன் போரிட்டோம் – உதய கம்மன்பில

சிறிலங்கா அரசியல் நெருக்கடியில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ) மற்றும் பிரித்தானியாவின் எம்-16 புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் இருந்ததாக, மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

படையினரை விடுவித்தால் தான் தமிழ் கைதிகள் விடுதலை – மைத்திரி நிபந்தனை

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.