மேலும்

நாள்: 14th December 2018

ஞாயிறன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில்

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை மறுநாள்- ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பதவியேற்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாளை பதவி விலகுகிறார் மகிந்த – உறுதிப்படுத்தினார் நாமல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, நாளை பதவியில் இருந்து விலகவுள்ளார்.

நாளை பிரதமராக பதவியேற்பார் ரணில்?

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பெரும்பாலும் நாளை பதவியேற்பார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவின் மனு பிசுபிசுப்பு – தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக, மகிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

மூடிய அறைக்குள் நேற்றிரவு மைத்திரி -ரணில்- கரு இரகசிய சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருடன், தனியான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். 

ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் சிறிலங்காவில் உயர்மட்ட பேச்சு

ரஷ்யாவின் இராணுவ நிலப்பரப்பு ஆய்வுக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

அமைச்சர்களுடன் பதவி விலகுவார் மகிந்த?

சிறிலங்காவின் பிரதமராக கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் நியமிக்கப்பட்ட, மகிந்த ராஜபக்ச தனது அமைச்சரவையுடன், பதவியில் இருந்து விலகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் இன்றிரவு முக்கிய முடிவு

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்.

ஐதேமு அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சியினரும் இணைவதற்கு வாய்ப்பு

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றும் இடம்பெறும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவின் மனு மீது இன்று முக்கிய உத்தரவு

மகிந்த ராஜபக்சவும், அவரது அமைச்சர்களும், பிரதமராகவும், அமைச்சர்களாகவும் செயற்படுவதற்குத் இடைக்காலத் தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.