இடைநிறுத்தப்பட்ட நிதி உதவிகளை பெற வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சு
அரசியல் குழப்பங்களை அடுத்து இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டு நிதி உதவிகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக ஜனவரி மாதம் பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
”அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம், மற்றும் ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகம் ஆகியவற்றுடனேயே பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.
அனைத்துலக நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் ரூபா கடனின், ஆறாவது தவணைக் கொடுப்பனவான, 250 மில்லியன் டொலரை இடைநிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிறுவனம் 480 மில்லியன் டொலர் உதவியை நிறுத்தி வைத்துள்ளது.
ஜப்பானின் அனைத்துலக ஒத்துழைப்பு முகவரகம் 1.7 பில்லியன் டொலர் இலகு தொடருந்து திட்டத்துக்கான உதவியை இடைநிறுத்தியுள்ளது.
இந்த நிதி உதவிகளை விரைவாக மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஜனவரி மாதம் பேச்சுக்கள் நடத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.