மேலும்

மாதம்: January 2019

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வவுனியாவில் பாரிய போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வழங்கக் கோரி வவுனியாவில் நேற்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டது.

அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக மனோ கணேசன் கூட்டணி எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுக்கு இணங்காவிடின், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரித்துள்ளது.

சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களுடன் வருகிறது ஐ.நாவின் சிறப்பு விமானம்

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களும் ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன.

அனைத்துலக உறவுகளுக்கான நிலையத்தை உருவாக்குகிறார் மகிந்த

அனைத்துலக உறவுகளுக்கான மகிந்த ராஜபக்ச நிலையத்தை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளார்.

மலேசியப் போர்க்கப்பலில் இருந்து அதிகாரியை மீட்டு வந்த சிறிலங்கா கடற்படை

சிறிலங்காவுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த மலேசிய போர்க்கப்பல் ஒன்றில், நோயுற்றிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

டிசெம்பர் 07 இல் அதிபர் தேர்தல்

சிறிலங்கா அதிபர் தேர்தல் வரும் டிசெம்பர் 07ஆம் நாள் அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவுடன் பேச்சுக் கூட நடத்தவில்லை – ருவன் விஜேவர்த்தன

சிறிலங்காவில் அமெரிக்காவின் இராணுவத் தளம் எதையும் அமைப்பது தொடர்பாக அந்த நாட்டுடன் எத்தகைய உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பணிப்பாளராக கடற்படை அதிகாரி – போர்க்கொடி உயர்த்தும் சுங்க அதிகாரிகள்

சுங்கப் பணிப்பாளராக முன்னாள் சிறிலங்கா கடற்படை அதிகாரியை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் திணைக்கள அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வவுனியா வடக்கில் சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்படும் தமிழர் நிலங்கள்

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் பாரம்பரியமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில், புதிய சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சிறிலங்காவுக்கான புதிய அவுஸ்ரேலிய தூதுவர் அறிவிப்பு

சிறிலங்காவுக்கான, அவுஸ்ரேலியாவின் புதிய தூதுவராக டேவிட் ஹொலி நியமிக்கப்பட்டுள்ளார் என, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பைன் அறிவித்துள்ளார்.