மேலும்

மாதம்: October 2018

வடக்கு முதல்வரைச் சந்தித்தார் பதில் அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று மாலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகசின் சிறையில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு இன்று

சிறிலங்கா அதிபரின் விமர்சனங்களை அடுத்து, தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும், சிறிலங்கா காவல்துறை மா அதிபரும் இன்று நடத்தவுள்ளனர்.

பொதுஜன முன்னணிக்குத் தலைமையேற்கத் தயார் – மகிந்த அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரியாவிடை கொடுக்கப்பட்ட மேஜர் ஜெனரலுக்கு கடைசி நேரத்தில் சேவை நீடிப்பு

சிறிலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, நேற்றுடன் ஓய்வுபெறவிருந்த நிலையில், திடீரென அவருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் காவல்துறை மீது சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு

நாட்டில் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறி விட்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

சீனாவின் மூலோபாய முதலீடுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் – ஜப்பானுக்கான அமெரிக்க தூதுவர்

சீனா மூலோபாய முதலீடுகள் மூலம் பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்றும், அதற்கு சிறிலங்கா போன்ற நாடுகள் உதாரணமாக இருப்பதாகவும், தெரிவித்துள்ளார், ஜப்பானுக்கான அமெரிக்கத் தூதுவர் வில்லியம் எவ் ஹகேற்றி.

பொல்கொல்ல பேருந்து குண்டு வெடிப்பு – 4 முன்னாள் புலிகளுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

பொல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நோர்வேக்குப் புறப்பட்டார் ரணில் – லண்டனுக்கும் செல்கிறார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

‘ஆவா’வை அடக்க இராணுவமா? – சிறிலங்கா இராணுவத் தளபதியின் கோரிக்கை நிராகரிப்பு

வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடங்குவதற்கு, சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு தேவையில்லை என்றும், காவல்துறையே அதனை கையாளும் என்றும் சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.