மேலும்

நாள்: 12th October 2018

வழிநடத்தல் குழுவின் கூட்டத்தில் நேற்றும் கிளம்பிய ‘ஏக்கிய ராஜ்ய’, ‘ஒருமித்த நாடு’ சர்ச்சை

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ‘ஏக்கிய ராஜ்ய’ மற்றும், ‘ஒருமித்த நாடு’ என்ற பதங்கள் தொடர்பாக, புதிய அரசியலமைப்பை வரைவதற்கான வழிநடத்தல் குழுவின் நேற்றைய கூட்டத்திலும், இறுதி முடிவு எட்ட முடியாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைக்கால அரசு அமைக்கும் பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் இல்லை – மகிந்தவிடம் கூறிய எஸ்.பி

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுக்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின், 15 பேர் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடன் நெருங்கிய ஒத்துழைப்பு – விருப்பம் வெளியிட்ட ரஷ்ய அதிபர்

சிறிலங்காவுடன், நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்  விருப்பம் வெளியிட்டுள்ளார்.

அலரி மாளிகை மாநாட்டில் இருந்து வெளியேறிய சிறிலங்கா அதிபர் – காரணம் என்ன?

அலரி மாளிகையில் நேற்று ஆரம்பமான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சற்று நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

46 ஆவது தலைமை நீதியரசராகப் பொறுப்பேற்கிறார் நளின் பெரேரா

சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதியரசராக, நீதியரசர் நளின் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் அவரது பெயர் நேற்று முன்மொழியப்பட்டது.

கொழும்புக்குள் நுழைந்த இந்திய நாசகாரி

இந்தியக் கடற்படையின் வழிகாட்டல் ஏவுகணை நாசகாரிக் கப்பலான ஐஎன்எஸ் ராஜ்புத் கொழும்புத் துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.

முதலமைச்சரைக் கைவிட்ட சட்டமா அதிபர்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கில், முதலமைச்சருக்கு சார்பாக முன்னிலையாகப் போவதில்லை என்று சட்டமா அதிபர் நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இரசாயன ஆயுதங்கள் பிரகடன சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சிடம்

இரசாயன ஆயுதங்கள் பிரகடனச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான திருத்தச்சட்ட மூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி அரசு குறித்து இதுவரை பேசவில்லை – மகிந்த

கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய தலைமை நீதியரசர் பதவிக்கு நளின் பெரேரா – சிறிலங்கா அதிபர் பரிந்துரை

சிறிலங்காவின் புதிய தலைமை நீதியரசராக நியமிப்பதற்கு, உச்ச நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேராவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்மொழிந்துள்ளார்.