மேலும்

நாள்: 28th October 2018

சபாநாயகருக்கு சம்பந்தன் அவசர கடிதம்

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணிலை பதவியில் இருந்து நீக்கியது ஏன்?- சிறிலங்கா அதிபர் விளக்கம்

ரணில் விக்கிரமசிங்கவுடனான முரண்பாடு, பொருளாதார நெருக்கடி மற்றும், தன்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் அமைச்சர் ஒருவருக்கு இருந்த பங்கு என்பனவற்றினாலேயே மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்க தான் முடிவெடுத்தேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

சிறிலங்காவின் அரசியல் நிலவரங்களை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன ரணதுங்கவை தாக்க முயற்சி – பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டதில் மூவர் காயம்

கொழும்பு- தெமட்டகொடவில் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்தியாவும் சீனாவும் மோதும் ஆசியாவுக்கான போர்

சீனா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் மாலைதீவு, நேபாளம், சிறிலங்கா மற்றும் பங்களாதேஸ் உட்பட்ட சிறிய தென்னாசிய நாடுகளில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக தொடர்ந்தும் போரிடுகின்றன.

அலரி மாளிகையை விடமாட்டோம் – ஐதேகவும் சூளுரை

ஜனநாயகத்துக்கு முரணான ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், நாடாளுமன்றத்தைக் கூட்டும் வரை அலரி மாளிகையை பாதுகாப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக, அந்தக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று காலை தகவல் வெளியிட்டுள்ளார்.

ரணிலுடன் ‘பொருந்தா திருமணம்’ – ஒரு ஆண்டிலேயே தெரிந்து விட்டதாம்

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடனான மகிழ்ச்சியற்ற பொருந்தாத திருமணம் முடிவுக்கு வந்து விட்டதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு பணியகத்துக்கு சீல் – மைத்திரியின் அதிகாரிகள் அதிரடி

காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற சிறிலங்கா அதிபர் செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசியல் குழப்பங்களில் சீனா தலையிடாதாம்

சிறிலங்காவின் உள்நாட்டு அரசியல் குழப்பங்களில் சீனா தலையீடு செய்யாது என்று, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மௌனத்தின் பின்னணி – புதுடெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள்

சிறிலங்காவில் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், அயல்நாடான இந்தியா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது.