மேலும்

பொதுஜன முன்னணிக்குத் தலைமையேற்கத் தயார் – மகிந்த அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு, கூட்டு எதிரணியின் தலைவர்களை தனது வீட்டில் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், செய்தியாளர்களை மகிந்த ராஜபக்ச சந்தித்திருந்தார்.

இதன்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாவது மாநாடு அடுத்த மாதம் நடைபெறும் போது, கட்சியின் தலைமைப் பதவியை ஏற்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கோரவுள்ளதாக, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே கட்சித் தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *