மேலும்

சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு இன்று

சிறிலங்கா அதிபரின் விமர்சனங்களை அடுத்து, தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும், சிறிலங்கா காவல்துறை மா அதிபரும் இன்று நடத்தவுள்ளனர்.

அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர், சிறிலங்கா காவல்துறை மா அதிபரைக் கடுமையாக விமர்சித்திருந்தார், சிறிலங்கா காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் சாடியிருந்தார்.

இந்த நிலையில், தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளிக்க,  சட்டம் , ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார செய்தியாளர் சந்திப்பபு ஒன்றை இன்று நடத்தவுள்ளார்.  இதில் சிறிலங்கா காவல்துறை மா அதிபரும் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளார் என, பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா மீது, நாமல் குமார கடந்த 13ஆம் நாள் குற்றச்சாட்டை முன்வைத்த பின்னர் நடத்தப்படும் முதலாவது செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *