மேலும்

நாள்: 30th October 2018

சிறிலங்கா: இந்தியாவுக்கு எழுந்துள்ள இராஜதந்திர சவால்

கடந்த செப்ரெம்பர் மாதம் மாலைதீவில் தேர்தல் இடம்பெற்றதைத் தொடர்ந்து நிலவிவந்த அரசியல் முறுகல்நிலையானது தற்போது ஒரளவு தணிந்து வரும் நிலையில், இந்தியாவின் பிறிதொரு அயல்நாடான சிறிலங்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட அரசியல் முறுகல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவரிடம் ஆட்சி – சமந்தா பவர் சீற்றம்

சிறிலங்காவில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரி – மகிந்த கூட்டுக்கு எதிராகப் பலம் காட்டியது ஐதேக

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, சிறிலங்கா அதிபருக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டக் கோரியும், கொழும்பில் ஐதேக இன்று பாரிய பேரணியை நடத்தி வருகிறது.

மகிந்த ராஜபக்சவையே சந்தித்தார் சம்பந்தன் – சிறிலங்கா பிரதமரை அல்ல

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது – என்ன சொல்கிறார்கள்? – நடப்புகளின் சங்கமம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பு அல்ல என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியத் தூதரைச் சந்திக்க தொடர்ந்து தூது விடும் மகிந்த – நழுவும் புதுடெல்லி

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு தொடர்ந்து, தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும், எனினும், தற்போதைய சூழ்நிலையில், அவரிடம் இருந்து விலகியிருக்க புதுடெல்லி முடிவு செய்திருப்பதாகவும், எக்கொனமிக் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று வன்முறை வெடிக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சிறிலங்கா அதிபரிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

சிறிலங்காவின் நிலைமைகள் திடீரெனச் சீரழிந்துள்ளமை, அமைதியின்மைக்கும், உறுதியற்ற நிலைக்கும் வழிவகுக்கும் என்பதால், நாடாளுமன்றத்தை உடனடியாக மீளக் கூட்டுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

வசந்த சேனநாயக்க ஏமாற்றி விட்டார் – சஜித் அதிர்ச்சி

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வசந்த சேனநாயக்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டது குறித்து, அந்தக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

அரசியல் குழப்பத்தினால் அங்குமிங்கும் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த, மலையக மக்கள் முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.