மேலும்

மாதம்: October 2018

ஈரான் மீதான தடைகளால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – சிறிலங்கா பிரதமர்

பூகோள பொருளாதார நெருக்கடி மோசமடைந்து வருவதாகவும், இதனை எதிர்கொள்வதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணியில் 9 அமைச்சுக்களின் செயலர்கள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திச் செயற்பாடுகளை வழிநடத்தவும், கண்காணிக்கவும், அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டச் செயலணிக்கு, 9 அமைச்சுக்களின் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வல்லரசுகளின் மோதலால் சிறிய நாடுகளுக்கே பாதிப்பு – சிறிலங்கா அதிபர்

தற்போதைய பொருளாதார மந்தநிலை சிறிலங்காவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் இந்தச் சவாலை எதிர்கொள்ளுகின்றன என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையுடன் சிறிலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி

இந்திய கடற்படையினருடன் இணைந்து பல்வேறு கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு திரும்பியுள்ளன.

ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா  சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் வெளிநாட்டுப் போர்க்கப்பல்களுக்கு தனியான இறங்குதுறை

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்பதற்கான, தனியான இறங்குதுறை ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்காவின் பிரதான கடற்படைத் தளத்தை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அங்கு, உயர்தொழில்நுட்ப கருவிகள், கண்காணிப்பு பொறிமுறைகள் நிறுவப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் வெளிநாடு சென்ற சிறிலங்கா அதிபர், பிரதமர் – 20 மில்லியன் மக்களின் நிலை

சிறிலங்கா அதிபரும், பிரதமரும், ஒரே நேரத்தில் வெளிநாடு சென்றிருந்ததால், கடந்தவாரம் ஒரு நாள் முழுவதும், சிறிலங்காவில் 20 மில்லியன் மக்களுக்குப் பொறுப்பேற்கும் நிலையில் எவரும் இருக்கவில்லை என்று கொழும்பு ஆங்கில ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களில் மீண்டும் சந்தித்த மகிந்த – மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இரண்டாவது தடவையாக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

நாற்கர கூட்டு மூலோபாயம் – லோகன் பரமசாமி

உலகில் அரசியல் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் அரசுகள் தமது செல்வாக்கை பலப்படுத்தும் முகமாக பல்வேறு இதர அரசுகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வது சர்வதேச அரசியலில் ஒரு முக்கியமான அங்கமாக பார்த்து கொள்ளப்படுகிறது.