மேலும்

மாதம்: February 2018

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – சிறிலங்கா அதிபரை இன்று சந்திக்கிறார் இராணுவத் தளபதி

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் – சுமந்திரன் நம்பிக்கை

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சரியான சமிக்ஞையையே காண்பித்தாராம் – ‘கழுத்தறுக்கும்’ பிரிகேடியருக்கு ருவான் ஆதரவு

விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சரியான சமிக்ஞையையே காண்பித்துள்ளார் என்றும் அதற்காக அவரை ஆதரிப்பதாகவும், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றியது ஐதேகவே – மங்கள சமரவீர

ஜெனிவாவில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றியது என்று சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவை விடுவித்தது அனைத்துலக காவல்துறை?

டுபாயில் அனைத்துலக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது முகநூல் பதிவு ஒன்றில் உதயங்க வீரதுங்கவே வெளியிட்டுள்ளார்.

மட்டு. மாநகரசபை, மூதூர் பிரதேச சபைக்கு மிகநீளமான வாக்குச்சீட்டு

சிறிலங்காவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், மட்டக்களப்பு மாநகரசபைக்கும், மூதூர் பிரதேச சபைக்குமான வாக்குச்சீட்டுகளை மிகவும் நீளமானவையாக அச்சிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரின் உத்தரவு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை – மஹேஷினி கொலன்ன

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் அமர்த்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பாக தமக்கு ஏதும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவுடன் முடிந்தது தேர்தல் பரப்புரைகள் – மீறினால் கடும் நடவடிக்கை

சிறிலங்காவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழு சிறப்பு அரசிதழ் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத் மாநாட்டில் பங்கேற்க இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரவாதிகளை திருப்திப்படுத்த முனைகிறார் மைத்திரி – கூட்டமைப்பு கண்டனம்

பிரிகேடியர் பிரியந்த பெர்னான்டோவை பணி இடைநிறுத்தும் செய்யும் உத்தரவை ரத்துச் செய்து, அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ள உத்தரவிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.