மேலும்

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – சிறிலங்கா அதிபரை இன்று சந்திக்கிறார் இராணுவத் தளபதி

maithri-mahesh (1)லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

“அன்றைய நாள், ஆர்ப்பாட்டக்காரர்கள், விடுதலைப் புலிகளின் கொடிகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பியதுடன், பிரபாகரனைப் புகழும் பாடல்களையும் பாடினர்.

அப்போது பிரிகேடியர் பிரியங்க தனது சீருடையில் இருந்த சிறிலங்கா கொடியை சுட்டிக்காட்டி, பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே கவனித்து விட்டதாக சைகை மூலம் காண்பித்திருந்தார்.

இது எந்தவகையிலும், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் செயல் அல்ல. அவருக்கு எதிராக விசாரணை நடத்தவோ, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

அங்கு என்ன நடந்தது என்று இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து விளக்கவுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *