போர்க்குற்றச்சாட்டில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றியது ஐதேகவே – மங்கள சமரவீர
ஜெனிவாவில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றியது என்று சிறிலங்காவின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை, உயன்வத்தவில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”ஜெனிவாவில் மாத்திரம் அரசாங்கம் வெற்றி பெறவில்லை. ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீளப் பெற்றிருக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதி தடையை நீக்கச் செய்திருக்கிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.