மேலும்

மைத்திரியின் தொலைபேசி அழைப்பு – பேசாமல் நழுவினார் மகிந்த

maithri-mobileகொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் ஒரு கட்டத்தில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கூடடு எதிரணியின் ஆதரவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முனைப்புகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட சூழலில்,  கடந்த வியாழக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சவை தொலைபேசியில் அழைத்திருந்தார் மைத்திரிபால சிறிசேன.

எனினும், அந்த தொலைபேசி அழைப்புக்கு மகிந்த ராஜபக்ச பதிலளிக்கவில்லை. அவரது மகனான நாமல் ராஜபக்ச தான் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளித்தார்.

தமது தந்தை சில முக்கிய வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு வழங்குவதுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து, நாமல் ராஜபக்சவுடன், மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்தினார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *