மேலும்

சட்டம் ஒழுங்கு அமைச்சை இழக்கிறார் சாகல?

sagala-ratnayakaஅமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து சாகல ரத்நாயக்க விலக்கப்படவுள்ளார் என்று அரசாங்கம் வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு அபிவிருத்தி, சட்டம் ஒழுங்கு அமைச்சராக உள்ள சாகல ரத்நாயக்க பதவியை விட்டு விலக அண்மையில் அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் விருப்பம் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் நடக்கவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, சாகல ரத்னாநாயக்கவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் பதவி மாத்திரம் அவருக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *