யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக இருவருக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை
யாழ். போதனா மருத்துவமனையில் முதல் முறையாக இரண்டு பேருக்கு திறந்த இதய அறுவைச் சிசிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ். போதனா மருத்துவமனையில் முதல் முறையாக இரண்டு பேருக்கு திறந்த இதய அறுவைச் சிசிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 4 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன.
வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளில், 10 அரசியல் கட்சிகளும் 7 சுயேட்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி நகர சபை தவிர்ந்த 16 உள்ளூராட்சி சபைகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட 125 வேட்புமனுக்களில், 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 4 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்காக, 11 அரசியல் கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணி, யாழ்.மாவட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட 4 உள்ளூராட்சி சபைகளுக்குத் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களில் 09 அரசியல் கட்சிகளும், 03 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவில் இருந்த 13 வேட்பாளர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 79 வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.