மேலும்

நாள்: 25th December 2017

அகங்காரவாதமும், அபிலாசைகளும்

அரசியல் அபிவிருத்தி  என்பது  ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத விடயமாக இருக்கிறதா ?  அல்லது  கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா? என்பது சமூக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள  கேள்வியாக உள்ளது.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வி – காங்கிரஸ்

சிறிலங்கா தொடர்பான வெளிவிவகாரக் கொள்கையில், நரேந்திர மோடி அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

சம்பந்தனிடம் நலம் விசாரித்தார் மகிந்த

உடல்நலக் குறைவினால், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

அஞ்சல் மூல வாக்களிப்பு ஜனவரி 25ஆம், 26ஆம் நாள்களில்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி 25ஆம், 26ஆம் நாள்களில் நடைபெறும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மாலிக்குப் புறப்பட்டது சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது அணி

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக, 150 படையினரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது அணி நேற்றுக்காலை புறப்பட்டுச் சென்றது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தியாவில் நான்கு நாட்கள் பயணம்

சிறிலங்கா  வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, நான்கு நாட்கள் இந்தியாவில் அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எஸ்எம்ஜி நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் காலமான ஈழத்தின் மூத்த ஊடகவியலாளரும், ஈழநாடு, ஈழநாதம், தினக்கதிர் போன்ற நாளிதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவருமான எஸ்எம்ஜி, கோபு என் அழைக்கப்படும் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது.

வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை – யாழ். படைகளின் தளபதி

விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே,  வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை என்பதை சிறிலங்கா இராணுவம் திடமாக நம்புகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வர் – மலேசியப் பிரதமர் சந்திப்பைத் தடுக்க முயன்ற சிறிலங்கா அரசு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக் சந்திப்பதைத் தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிதம்பரத்துக்கு யாத்திரிகளை அனுப்ப கப்பலைத் தேடும் ஆளுனர்

தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில் பங்கேற்பதற்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.