மேலும்

நாள்: 15th December 2017

வடக்கின் நான்கு மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியது கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நான்கு மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

மகிந்த அணியில் இருந்து தாவிய சிறியானி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம இன்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான ஆறு காரணங்கள்

ஆறு காரணங்களாலேயே உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படுவதாக பவ்ரல் அமைப்பின் பேச்சாளர் ரோகண ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடைவிதிப்பு

சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.

தேர்தல் பரப்புரைகளுக்கு பொலித்தீன் பயன்படுத்த தடை

தேர்தல் பரப்புரை அலங்காரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்தப்படுவதை தடை செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்குப் பணித்துள்ளார்.

புதுடெல்லியின் பாதுகாப்பு கரிசனைகளை சிறிலங்கா மனதில் கொள்ள வேண்டும் – இந்தியா

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தில் புதுடெல்லியின் பாதுகாப்புச் கரிசனைகளை சிறிலங்கா அரசாங்கம், கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தியுள்ளது.