மேலும்

நாள்: 20th December 2017

கோத்தாவின் திடீர் முடிவினால் ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா இழப்பு – விசாரணைக்கு நடவடிக்கை?

பாதுகாப்புத் தலைமையகங்களை கொழும்பு நகரில் இருந்து அகற்றும்- முன்னைய அரசாங்கத்தின் திட்டமிடப்படாத – திடீர் முடிவினால் சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் வாடகைக்குப் பெற்றுள்ள 15 கட்டடங்களுக்காக ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபாவை வாடகைக் கொடுப்பனவாக வழங்க வேண்டியுள்ளது.

தடையை நீக்குங்கள் – ரஷ்ய அதிபருக்கு கடிதம் அனுப்பினார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு, ரஷ்ய அதிபர விளாடிமிர் புடினிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கின் தேவைகளை அறியும் குழுவை அனுப்புகிறார் மலேசியப் பிரதமர்

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்குள்ள தேவைகள்  குறித்து ஆராய்ந்து தகவல்களைத் திரட்டுவதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தமது நாட்டின் குழுவொன்றை அனுப்பவுள்ளதாக மலேசியப் பிரதமர்  அப்துல் நஜீப் ரசாக் உறுதியளித்துள்ளார்.

கூட்டு அரசில் இணைந்திருப்பதா? – 31ஆம் நாள் முடிவு செய்கிறது சுதந்திரக் கட்சி

ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பதா- இல்லையா என்று முடிவு செய்வதற்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்பு மத்திய குழுக்  கூட்டம் இடம்பெறவுள்ளது.

ரஷ்யாவில் சிறிலங்கா தேயிலை சந்தையை கைப்பற்றுவதற்கு கென்யா முயற்சி

சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிகத் தடையை விதித்துள்ள நிலையில், அந்தச் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் கென்யா இறங்கியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு முதல் கப்பல் வந்தது

அம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர், முதலாவது கப்பல், இறங்குதுறைக்கு வந்துள்ளது.

தேயிலை இறக்குமதி தடை – மாத இறுதியில் சிறிலங்காவுடன் பேச ரஷ்யா திட்டம்

சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதித்த தடை குறித்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மக்களை எதிர்கொள்ள முடியாததால் பதவி விலகினேன் – என்கிறார் நிமல் லான்சா

உள்நாட்டு விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிமல் லான்சா, நேற்று அறிவித்துள்ளார்.