மேலும்

நாள்: 11th December 2017

புலிகளுடனான போர் மிகச்சிறந்த படிப்பினை – இந்திய அமைதிப்படையின் முன்னாள் தளபதி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கை இந்திய இராணுவத்துக்கு மிகச்சிறந்த படிப்பினையாக இருந்தது என்று, இந்திய அமைதிப்படையின் தளபதியாக பணியாற்றிய லெப்.ஜெனரல் திபெந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ரிசாத், பசீர், ஹசன் அலி மயில் சின்னத்தில் புதிய கூட்டணி

ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பசீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடவுள்ளது.

சிறிலங்காவில் இந்திய விமானப்படைத் தளபதி – பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ, சிறிலங்காவின் பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

வீரவன்ச கட்சியின் முக்கிய தலைவர்கள் மூவர் சுதந்திரக் கட்சியில் இணைவு

விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்கள் மூவர் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

மைத்திரியுடன் இணைந்தார் சிறியாணி விஜேவிக்கிரம- வலுவிழக்கிறது கூட்டு எதிரணி

கூட்டு எதிரணியைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பாகியது உதயசூரியன் கூட்டணி

ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், ஈபிஆர்எல்எவ் இணைந்து உருவாக்கியுள்ள தேர்தல் கூட்டணிக்கு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.