மேலும்

நாள்: 18th December 2017

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக ஆர்னோல்ட் – மாகாணசபை உறுப்பினர் பதவியை உதறினார்

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் இம்மானுவல் ஆர்னோல்டை நிறுத்த தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனித உரிமைகள் குறித்த மேற்குலக நிலைப்பாடுகளை சிறிலங்கா, மலேசிய தலைவர்கள் கூட்டாக நிராகரிப்பு

இராணுவப் பயிற்சி, புலனாய்வுப் பரிமாற்றங்கள், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு மலேசியப் பிரதமரும், சிறிலங்கா அதிபரும் இணக்கம் கண்டுள்ளனர்.

பெப்ரவரி 10ஆம் நாள் உள்ளூராட்சித் தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல்கள் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கோரிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு – ஜெருசலேம் விவகாரத்தில் விடாப்பிடி

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒப்பரேசன் பவானுக்கு பயன்படுத்திய எம்.ஐ-8 உலங்குவானூர்திகளை நீக்கியது இந்திய விமானப்படை

சிறிலங்காவில் ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கைக்காக இந்தியப் படையினர் பயன்படுத்திய ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ.-8 உலங்குவானூர்திகள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

248 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று முதல் வேட்புமனுத் தாக்கல்

சிறிலங்காவில் 248 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

50 சீன இணையர்களுக்கு கொழும்பில் திருமணம் – சிறிலங்கா அரசே நடத்தி வைத்தது

50 சீன இணையர்களுக்கு நேற்று கொழும்பு நகரசபை மைதானத்தில் பிரமாண்ட திருமண விழா இடம்பெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருமணவிழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நேர்மையான, ஊழலற்ற வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் – விக்னேஸ்வரன்

வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில், நேர்மையான, ஊழலற்ற, சேவைமனப்பாங்குடைய, மக்களை நேசிக்கும், பண்பும் கொண்ட திறமையான  வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.