மேலும்

நாள்: 8th December 2017

இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது.

கூட்டமைப்பு குழப்பங்களைத் தீர்க்க உயர்மட்ட முயற்சிகள்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனப்பங்கீட்டில் இணப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்த்து வைக்கும் உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிக்கு மகிந்த அனுப்பிய புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு

உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டு எதிரணியும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியில் முடிந்த நிலையில்,புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றுக்கான வரைவு,  மகிந்த ராஜபக்சவினால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் கட்டுப்பணம் செலுத்துவதில் அரசியல் கட்சிகள் தீவிரம்

வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் கூட்டமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தியுள்ளன.

வரதராஜப்பெருமாளுக்கு மீண்டும் சிறிலங்கா குடியுரிமை

வடக்கு- கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணியின் முக்கிய தலைவருமான அண்ணாமலை வரதராஜப்பெருமாளுக்கு மீண்டும் சிறிலங்கா குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா

சிறிலங்கா உட்பட பத்து கரையோர நாடுகளுடன் இந்தியா தனது கடல்சார் புலனாய்வு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக நவம்பர் 1 அன்று இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா அறிவித்திருந்தார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கோவா கடல்சார் கருத்தரங்கிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

உதயசூரியன் கூட்டணியும் சாவகச்சேரி நகரசபைக்கு கட்டுப்பணம் செலுத்தியது

உள்ளூராட்சித் தேர்தலில் சாவகச்சேரி நகரசபைக்குப் போட்டியிடுவதற்கு, உதயசூரியன் சின்னத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி, கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக பங்கு உரிமை பகிர்வு உடன்பாட்டுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தின்  செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, சீன அரசு நிறுவனத்துடன், பங்கு உரிமையைப் பகிர்ந்து கொள்வதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா இந்தோ பசுபிக் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறிலங்காவுக்கு , அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று இதனை அறிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் கொழும்பு வருகிறார்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.