மேலும்

மாதம்: October 2017

அமைதிக்கான நோபல் பரிசு சிறிலங்கா அதிபருக்கு கிடைக்குமா? – இன்று அறிவிப்பு

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து சிங்கள மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை – சம்பந்தன்

அரசியலமைப்பின் ஊடாக பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறிலங்கா படைகளுடனான கூட்டுப் பயிற்சிகள் அதிகரிக்கும் – அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி போன்ற வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வடக்கு- கிழக்கு இணைப்பு விட்டுக் கொடுப்புகளுடன் இடம்பெற வேண்டும்- ஹக்கீம்

வடக்கு- கிழக்கு இணைப்பு விட்டுக் கொடுப்புகளுடன் இடம்பெற ​வேண்டும் என்றும் அது தொடர்பாகப் பேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் தேசிய செயற்திட்டம் – அமைச்சரவையில் முன்வைத்தார் சிறிலங்கா பிரதமர்

மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன், மாரப்பனவுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு

பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான வெளிவிவகாரப் பணியக அமைச்சர் மார்க் பீல்ட் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் சந்திப்பு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவின் உதவிச் செயலர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவின் எரிபொருள் சந்தையைக் கைப்பற்ற சீன நிறுவனங்கள் திட்டம் – அரசாங்கம் நிராகரிப்பு

அம்பாந்தோட்டையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, உள்ளூரில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு சீனா முன்வைத்த திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

போர்க்கப்பல் கொள்வனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்த கடற்படைத் தளபதியை ஓய்வுபெற வைக்க அழுத்தம்?

ரஷ்யாவிடம் இருந்து 24 பில்லியன் ரூபாவுக்குப் போர்க்கப்பல் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை ஓய்வுபெற நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கைவிரித்தது அவுஸ்ரேலிய தூதரகம்

மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலிய அரசின் தடுப்பு முகாமில் உயிரிழந்த தமிழ் இளைஞனின் உடலை சிறிலங்காவுக்கு அனுப்பும் வேலை தம்முடையது அல்ல என்றும் அதனை பபுவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது.