சம்பந்தன், மாரப்பனவுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு
பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான வெளிவிவகாரப் பணியக அமைச்சர் மார்க் பீல்ட் இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்திய பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க விவகாரங்கள் தொடர்பாகவே, இந்தச் சந்திப்புகளில் ஆராய்ந்துள்ளார்.
அத்துடன், சிங்கள, தமிழ் சமூகங்களைச் சேர்ந்த, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்த மார்க் பீல்ட், காணாமல் போனோர் பணியகம் தொடர்பான நம்பிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.