மனித உரிமைகள் தேசிய செயற்திட்டம் – அமைச்சரவையில் முன்வைத்தார் சிறிலங்கா பிரதமர்
மனித உரிமைகள் தொடர்பான தேசிய செயற்திட்டம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே மனிதஉரிமைகளுக்கான தேசிய செயற்திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அமைச்சரவை அமைச்சர்களின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் இந்த செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரிகள் குழு நியமிக்கப்படும்.
இதன் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கு அமைச்சர்கள் மட்ட கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.