ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் சந்திப்பு
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நாவின் உதவிச் செயலர்களுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இந்த வார முற்பகுதியில் நியூயோர்க்கில் இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மனையும், அமைதியைக் கட்டியெழுப்ப ஆதரவு அளிப்பதற்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோவையுமே, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனித்தனியாகச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளில் சிறிலங்கா நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.