மேலும்

மாதம்: August 2017

விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் ஒருமனதாக கொண்டு வரப்பட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டிமிற்றி ஏ மிக்கெலோவ்ஸ்கி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி சிறிலங்கா பயணம் – யாழ்ப்பாணமும் செல்கிறார்

இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ், சிறிலங்காவுக்கான நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் உயர் அதிகாரிகள் குழுவொன்றும் கொழும்பு வந்துள்ளது.

மத்தல விமான நிலையம் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை குறைக்க சிறிலங்கா முயற்சி

மத்தல விமான நிலையத்தை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் இந்தியாவின் திட்டம் குறித்து நாளை பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை 205 மில்லியன் டொலருக்கு, அபிவிருத்தி செய்து, 40 ஆண்டுகளுக்கு அதனை இயக்குகின்ற திட்டம் ஒன்றை இந்திய அரசாங்கம் முன்வைத்திருந்தது.

ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களுடனான சந்திப்பை திடீரெனப் பிற்போட்டார் மைத்திரி

முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்தவிருந்த கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிற்போட்டுள்ளார்.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு கொடுப்பது 100 மடங்கு ஆபத்தானது – விமல் வீரவன்ச

மத்தல விமான நிலையத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்குக் கொடுத்ததை விட 100 மடங்கு அதிகம் ஆபத்தானது என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்சவை வெளியேற்றுவதற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு

சிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு, சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடாதிபதி, வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மகிந்த ஆட்சிக்கால மோசடிகளை விசாரிக்க ட்ரயல் அட் பார் நீதிமன்றங்கள்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்க, புதிய மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஓய்வுபெற அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடிதம்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, தமது பதவியில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை அகதிகளை அனுப்ப கப்பல் சேவைக்கு அனுமதி கோருகிறது தமிழ்நாடு

சிறிலங்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமிழ்நாடு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.