மேலும்

விஜேதாச ராஜபக்சவை வெளியேற்றுவதற்கு அஸ்கிரிய பீடம் எதிர்ப்பு

Wijeyadasa Rajapaksheசிறிலங்காவின் நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சிகளுக்கு, சியாம் மகா நிக்காயவின் அஸ்கிரிய பீடாதிபதி, வரகாகொட சிறி ஞானரத்ன தேரர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

நாட்டையும் பௌத்தத்தையும், எந்த நபர் அல்லது எந்த அமைப்பு பாதுகாக்கிறதோ அவர்களுக்கு மகா சங்கம் எப்போதும் பாதுகாப்பு அளித்து வந்திருக்கிறது. இது சிறிலங்காவின் வரலாறு.

நாட்டின் நலன்களுக்காக பேசும் விஜேதாச ராஜபக்சவை துன்புறுத்தவே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய செயற்பாடுகளை அம்பலப்படுத்தியதால் தான், அவரை வெளியேற்றும் சூழ்ச்சி நடக்கிறது” என்றும் சியாம் மகா நிக்காயவின் பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *