மேலும்

நாள்: 16th August 2017

ஓய்வுபெற அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபருக்கு ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடிதம்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, தமது பதவியில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை அகதிகளை அனுப்ப கப்பல் சேவைக்கு அனுமதி கோருகிறது தமிழ்நாடு

சிறிலங்காவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தமிழ்நாடு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு அக்கறை – இந்தியத் தூதுவர்

சிறிலங்காவின் பாதுகாப்பின் மீது இந்தியா அக்கறை கொண்டிருப்பதாக சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகள் காரணமில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் அண்மையில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் உள்ளூர் விவகாரங்களாகும். இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

‘எனக்கு ஒன்றும் தெரியாது’ – இரண்டரை மணிநேர விசாரணையில் சிராந்தியின் பதில்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் முதற்பெண்மணி, சிராந்தி ராஜபக்சவிடம் எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் ஒன்றும் தெரியாது என்றே பதிலளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொக்குவிலில் சிக்கியவர் ஆவா குழுவின் துணைத் தலைவராம்

கொக்குவிலில் நேற்றுக்காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன், ஆவா குழுவின் துணைத் தலைவராகச் செயற்பட்டவர் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விஜேதாசவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரை 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த குடும்பத்துக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்துமாறு அமைச்சரவையில் அழுத்தம்

மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், தேவையற்ற இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.