மேலும்

ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களுடனான சந்திப்பை திடீரெனப் பிற்போட்டார் மைத்திரி

ranil-wickramasinghe-maithripala-sirisenaமுக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் நேற்று நடத்தவிருந்த கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிற்போட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பேச்சு நடத்தவிருந்தார்.

மிக முக்கியமான விவகாரங்கள் பல இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவிருந்தன. எனினும், இந்தக் கூட்டத்தை வரும் திங்கட்கிழமைக்கு சிறிலங்கா அதிபர் பிற்போட்டுள்ளார்.

டிசெம்பர் மாதம் 31ஆம் நாளுக்குப் பின்னர்,  தனித்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசிய முன்னணி தயாராகி வருகிறது என்று சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே சிறிலங்கா அதிபர் இந்த கூட்டத்தை பிற்போட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *